» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தனக்கு தானே பிரசவம் பார்த்த நர்ஸ் மீது கொலை வழக்குப்பதிவு
வியாழன் 2, மே 2024 4:58:03 PM (IST)
சென்னையில் தனக்கு தானே பிரசவம் பார்த்த குமரி மாவட்டத்தை சேர்ந்த நர்ஸ் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நர்ஸ் ஒருவர், சென்னையில் கழிவறையில் தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார். பிரசவத்தின் போது குழந்தையின் காலை வெட்டி எடுத்ததால் அந்த பெண் குழந்தை இறந்து இருப்பது டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்து உள்ளது. மேலும் குழந்தையை கத்தியால் வெட்டிய போது நர்சுக்கும் காயங்கள் ஏற்பட்டு உள்ளன.
இதையடுத்து நர்ஸ் மீது மாம்பலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து உள்ளனர். சிகிச்சை முடிந்ததும் நர்சு கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.