» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொடைக்கானலில் கோல்ஃப் விளையாடி மகிழ்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 4:44:26 PM (IST)

கொடைக்கானல் கோல்ஃப் மைதானத்தில் கோல்ஃப் விளையாடி மகிழ்ந்த தமிழக முதல்வர் திடீரென்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தார்.

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. வெயில் தாக்கத்தை தாளாமல் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது பல்வேறு அரசியல் தலைவர்களும் கொடைக்கானலில் நோக்கி படையெடுத்து வருகிறார்கள். இந்நிலையில் கொடைக்கானலுக்கு 5 நாள் பயணமாக ஓய்வுக்காக வந்த தமிழக முதல்வர் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார்.

இந்நிலையில் நேற்று முழுவதும் ஓய்வில் இருந்த அவர் இன்று மாலை கொடைக்கானல் பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொண்டும் கோல்ஃப் விளையாடியும் மகிழ்ந்தார் .தமிழக முதல்வரின் வருகையால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்த போதிலும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு தமிழ்நாடு முதலமைச்சர் விளையாடி மகிழ்ந்தார்.

மேலும் கோல்ஃப் மைதானத்திற்கு வெளியே பேட்டரி கார் மூலம் வந்த முதல்வர் திடீரென்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை சந்திக்க வேண்டும் என்று கூறி அவர்கள் காத்திருந்த இடத்திற்கு வந்து பயணிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தார் .மேலும் கொடைக்கானலில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா ஏதேனும் தீர்க்கப்பட வேண்டுமா என்றும் மூதாட்டி இடம் நலம் விசாரித்து சென்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory