» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டெம்போவில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலி : நாகர்கோவில் அருகே சோகம்!!

செவ்வாய் 23, ஏப்ரல் 2024 3:48:51 PM (IST)

நாகர்கோவில் அருகே மின் வயரில் டெம்போ உரசியதால் மின்சாரம் பாய்ந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

நாகர்கோவில் அருகே வெள்ளமடம் கிறிஸ்து நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (48), டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவருடைய டிப்பர் வசதி கொண்ட டெம்போவை ஓட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணி அளவில் தளவாய்புரம் சவரி முத்து காம்பவுண்டுக்கு டெம் போவில் மணல் ஏற்றி வந்தார். அங்கு மணலை கொட்டுவ தற்காக டெம்போவின் டிப்பரை தூக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக டெம்போவில் அந்த வழியாக மேலே சென்ற மின்கம்பி உரசியது. 

இதனால் டெம்போவில் மின்சா ரம்பாய்ந்து அதை இயக்கிய பாஸ்கரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனே நேசமணிநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பாஸ்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory