» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறையில் விசாரணைக் கைதி மரணம் : போலீசார் மீது உறவினர்கள் புகார்!

வெள்ளி 5, ஏப்ரல் 2024 11:57:58 AM (IST)



மதுரை சிறையில் அடைக்கப்பட்ட விசாரணைக் கைதி கார்த்திக் உயிரிழப்புக்கு காவல் துறையினரே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் வழிப்பறி வழக்கு ஒன்றில் மதிச்சியம் காவல்துறையினரால் கடந்த 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (வெள்ளிக்கிழமை) காலை உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்ட ஒரே நாளில் சிறையில் இருந்து உடல் நலக் குறைவால் விசாரணை சிறைக் கைதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திக் உயிரிழப்புக்கு காவல்துறையினரே காரணம் என குற்றம்சாட்டியுள்ள அவரது உறவினர்கள், மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் புகார் கூறியுள்ளனர். எனவே கார்த்திக் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பி சிறை முன் குவிந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory