» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மண்டைக்காடு கோயில் குறித்து அவதூறு: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

திங்கள் 11, மார்ச் 2024 4:26:06 PM (IST)

மண்டைக்காடு கோயில் குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பிய அதிகாரியை கைது செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பியதாக திங்கள் நகர் பணிமனை கிளை மேலாளர் மகேஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய இரணியல் காவல் துறையை வலியுறுத்தி திங்கள் நகர் பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. குருந்தன் கோடு ஒன்றிய தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் குருந்தன்கோடு ஒன்றிய செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். 

கோட்ட பொறுப்பாளர் மிசா சோமன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினார். இதில், பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநிலசெயலாளர் உமாரதிராஜன், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர். காந்தி, திங்கள்நகர் கவுன்சிலர்கள் குமரன், ஜெயசேகரன், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தலைவர் கோபு, ஒன்றிய பொருளாளர் பிரேம், ரெத்தின பாண்டியன் உட்படபலர் கலந்து கொண்டு பேசினர். ஆர்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory