» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எடப்பாடி பழனிச்சாமியுடன் சந்திப்பு ஏன்? தமாகா இளைஞர் அணி யுவராஜா விளக்கம்!

திங்கள் 26, பிப்ரவரி 2024 5:14:16 PM (IST)



அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடனான சந்திப்பு குறித்து தமிழ் மாநில காங்கிரஸ்  இளைஞர் அணி தலைவர் யுவராஜா விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் த.மா.கா. அ.தி.மு.க. கூட்டணியோடு இணைந்து பல தேர்தல்கள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்தோம் அதற்கு மேலாக  நல்ல நட்போடு அரசியல் பணியாற்றி வந்தோம்.

தலைவர்  G.K.வாசன்   பா.ஜ.க வுடன் கூட்டணி என்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிவித்துள்ளார்கள். பெருந்தலைவர் காமராசர், மக்கள் தலைவர் மூப்பனார் இவர்கள் வழியில் அரசியல் பயின்றவன்  என்ற காரணத்தினால் நான் மற்றும் எனது  குடும்பத்தினர் சார்பாக  தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களைச் சந்தித்து நன்றியைத் தெரிவித்துவிட்டு வந்துள்ளேன். என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory