» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சொத்து குவிப்பு வழக்கு: குமரியில் சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!
வெள்ளி 23, பிப்ரவரி 2024 3:24:53 PM (IST)

சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக குமரியில் உள்ள சார் பதிவாளர் மகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்..
திருநெல்வேலி மாவட்டம் வி. கே. புரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் பொறுப்பு அலுவலராக இருப்பவர் வேலம்மாள். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கின் அடிப்படையில் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சார்பதிவாளர் பொறுப்பு வகிக்கும் வேலம்மாளின் மகள் கிருஷ்ணவேணியின் வீடு குமரி மாவட்டம் மருங்கூர் ஊரில் உள்ளது. அங்கு குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் ஒரே நேரத்தில் இங்கும் சோதனை நடைபெற்று வருகிறது.
சோதனையில் ஏராளமான வங்கி பண பரிவர்த்தனைகள் செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சோதனை தொடர்ந்து நடந்து வருவதால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இன்னும் கூடுதலாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விபரங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் மினிபஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:05:57 PM (IST)

தமிழ்நாட்டில் மும்மொழிக்கொள்கையை அனுமதிக்க வேண்டும்: நடிகர் சரத்குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 5:08:09 PM (IST)

பாளையங்கோட்டையில் பொருநை அருங்காட்சியகம் பணிகள் : அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:44:21 PM (IST)

காசி தமிழ் சங்கமம் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:31:40 PM (IST)

தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 10:22:19 AM (IST)

மும்மொழி கல்விக்கொள்கைக்கு எதிராக போராட்டம் : இந்திய மாணவர் சங்கத்தினர் கைது
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:41:15 AM (IST)
