» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தோவாளை ஆராய்ச்சி மைய வாளகத்தில் அரிய வகை மலர்களை ஆட்சியர் ஆய்வு!
செவ்வாய் 28, நவம்பர் 2023 5:06:22 PM (IST)

தோவாளை மலரியல் ஆராய்ச்சி மைய வாளகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அரியவகை மலர்களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலரியல் ஆராய்ச்சி மைய வளாகத்தினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்: குமரி மாவட்டமானது மலைவளம், காட்டுவளம், கடல்வளம், வயல்வளம், நிலவளம், மண்வளம் நிறைந்த மாவட்டமாக திகழ்வதோடு, பேச்சிப்பாறை உள்ளிட்ட பல்வேறு அணைகள், குளங்கள், வாய்கால்கள். அரியவகை பழவகைகள், மருந்துவகைகள் உள்ளிட்டவைகள் நிறைந்த மாவட்டமாக காட்சியளிக்கிறது.
அதனடிப்படையில் மாவட்டத்திற்குட்பட்ட மலர்வகைகள், பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டத்தை சேர்ந்த மலர்களையும் வளர்த்து பராமரிக்கும் வகையில் தமிழ்நாடு வேளாண் ஆராய்ச்சி மையம் சார்பில் தோவாளை பகுதியில் மலரியல் ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டு, அந்த வளாகத்தில் பல்வேறு மலர் வகை தாவரங்களை வளர்த்து பராமரித்து வருகிறார்கள்.
குறிப்பாக இந்த வளாகத்தில் தாமரை, லில்லி. வெட்சி, தும்பை, முல்லை, ஆம்பல், நங்கு, மரா, சேடல், வடவம், வளசு, அதிரல், பிரதிகம், தளவம், பிட்டி, பிரமளவ், பிண்டி,தெற்றி,அரளி, நன்நிடு உள்ளிட்ட பல்வேறு வகையான தாவர வகைகளில் மலர்கள் பராமரிக்கப்பட்டு ஆராய்ச்சி மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாங்குநேரி அருகே 754 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிப்பு : காவல்துறை நடவடிக்கை
ஞாயிறு 18, மே 2025 10:44:15 AM (IST)

டாஸ்மாக் ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் : அன்புமணி வலியுறுத்தல்
சனி 17, மே 2025 5:12:23 PM (IST)

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சனி 17, மே 2025 4:20:36 PM (IST)

குமரி மாவட்டத்தில் மே 24ல் மெகா வேலைவாய்ப்பு முகாம் : இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு!
சனி 17, மே 2025 4:06:54 PM (IST)

மதுபோதையில் குளத்தில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி மரணம்!
சனி 17, மே 2025 3:44:44 PM (IST)

பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கு: ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது!
சனி 17, மே 2025 12:22:27 PM (IST)
