» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 பவுன் நகைகள் திருட்டு: பணிப்பெண் சிக்கினார்
செவ்வாய் 21, மார்ச் 2023 5:02:15 PM (IST)
நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரிலிருந்த தங்கம், வைரம், வைடூரியம் என 60 பவுன் நகைகள் திருடுபோயின. இது தொடர்பாக வழக்குப் பதிந்த போலீஸார் வீட்டு பணிப் பெண் ஒருவரைப் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், "போயஸ் கார்டனில் உள்ள எனது தந்தை ரஜினிகாந்த் வீட்டில் வசித்து வருகிறேன். 2019-ம் ஆண்டு எனது தங்கைக்கு திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து எனக்கு சொந்தமான நகைகளை தனியாக லாக்கரில் வைத்து பராமரித்து வருகிறேன்.
அந்த லாக்கரில் 60 பவுன் தங்க, வைர நகைகள் மற்றும் பாரம்பரிய நகைகள் இருந்தன. கடந்த 2021-ம் ஆண்டு வரை ஆழ்வார்பேட்டை செயின்ட்மேரிஸ் சாலையில் வசித்து வந்த வீட்டில் நகைகள் இருந்தன. பின்னர் கணவருடன் வசித்து வந்த சிஐடி நகரில் உள்ள வீட்டில் குடியேறியபோது அங்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து தற்போது போயஸ் கார்டனுக்கு குடியேறி வசித்து வருகிறேன். லாக்கர் மாறி மாறி 3 வீடுகளிலும் வைக்கப்பட்டிருந்தது.
செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நான் இருந்தபோது லாக்கர் சாவியை எனது அலமாரியில் வைத்திருப்பேன். இது எனது வீட்டில் வேலை செய்யும் பணிப் பெண்களான ஈஸ்வரி, லட்சுமி, கார் ஓட்டுநர் வெங்கட் ஆகியோருக்கு தெரியும். நான் வீட்டில் இல்லாத நேரத்திலும் அவர்கள் அங்கு சென்று வந்துள்ளனர்.
கடந்த மாதம் 10-ம் தேதி லாக்கரை நான் திறந்து பார்த்தபோது அதில் சில நகைகள் மட்டுமே இருந்தன. மதிப்பு மிக்க பல நகைகள் காணவில்லை. இந்த நகைகள் அனைத்தும் திருமணத்துக்கு முன்னும், பின்னும் என 18 ஆண்டுகளாக வாங்கப்பட்டவையாகும். ஒரு ஜோடி வைரம் மற்றும் பழங்கால தங்க நகைகள், நவரத்தின நகைகள், பழங்கால வைரம், ஆரம்,நெக்லஸ், வளையல்கள் உட்பட 60பவுன் நகைகள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பாக எனது வீட்டில்பணி செய்யும் 2 பணிப்பெண்கள் மற்றும் கார் ஓட்டுநர் மீது சந்தேகம்உள்ளது.
இது தொடர்பாக உரியவிசாரணை நடத்தி திருடுபோன எனது நகைகளை மீட்டுத் தர வேண்டும்” என்று புகாரில் குறிப்பிட்டு இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். புகாரின் பேரில் தேனாம்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் இளங்கனி விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
ஐஸ்வர்யா, திருடுபோன நகைகள் சிலவற்றை அடையாளம் காட்டும் வகையில் தனது சகோதரியின் திருமணம் உட்பட மேலும் சில நிகழ்ச்சிகளில் அணிந்திருந்த புகைப்படங்களை போலீஸாரிடம் கொடுத்துள்ளார். அதையும் அடிப்படையாக வைத்து போலீஸார் துப்புத்துலக்கி வருகின்றனர்.
முதல் கட்டமாக பணிப்பெண்கள், கார் ஓட்டுநர் போலீஸாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்நிலையில், நகை திருடுபோன வழக்கில் பணிப்பெண்ணான ஈஸ்வரி என்பவரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், அவரிடமிருந்து 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்த நகைகள் கடந்த 4 ஆண்டுகளாக சிறிது சிறிதாக திருடப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நகைகளை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் சொத்து முடக்கத்துக்கும் தொடர்பு இல்லை: மேலாளர்
செவ்வாய் 30, மே 2023 5:19:32 PM (IST)

பிரதமர் குறித்து தரக்குறைவாக விமர்சித்த பதிவை நீக்கினார் அமைச்சர் மனோ தங்கராஜ்
செவ்வாய் 30, மே 2023 5:04:07 PM (IST)

கஞ்சா வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக காவலர் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 30, மே 2023 4:35:20 PM (IST)

நகை வியாபாரியிடம் ரூ1.5 கோடி கொள்ளை: மிளகாய் பொடி தூவி மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 30, மே 2023 4:04:04 PM (IST)

வெற்றிக்கோப்பையுடன் சென்னை வந்த சிஎஸ்கே வீரர்கள்: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!!
செவ்வாய் 30, மே 2023 3:47:23 PM (IST)

சிஎஸ்கேவை வெற்றி பெறச் செய்தவர் பாஜக உறுப்பினர்: அண்ணாமலை சர்ச்சை கருத்து!
செவ்வாய் 30, மே 2023 3:42:42 PM (IST)
