» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கவர்ச்சிகரமான அறிவிப்புகள், மக்களை ஏமாற்றிய நிதிநிலை அறிக்கை – சீமான் கருத்து
செவ்வாய் 21, மார்ச் 2023 2:49:16 PM (IST)
கவர்ச்சிகரமான அறிவிப்புகளை மட்டுமே கொண்ட மக்களை ஏமாற்றிய நிதிநிலை அறிக்கை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படுமெனத் தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, இப்போது தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு மட்டுமே உரிமைத்தொகையை வழங்குவோம் என அறிவித்திருப்பது அப்பட்டமான மோசடித்தனமாகும்.
கடந்த நிதியாண்டில், 45,000 கோடி ரூபாய் மதுக்கடைகளின் மூலம் வருமானம் கிடைத்துள்ளதெனக் கூறி, அதனை 50,000 கோடி ரூபாயாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது வெட்கக்கேடானது. பெரும் பெரும் பொருளாதார நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைத்த திமுக அரசு, அவர்கள் மூலம் மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கான வழிவாய்ப்புகளைத் தேடாது, மதுக்கடைகளையே வருவாய்க்கான முதன்மை வாய்ப்பாகக் கொண்டிருப்பது மிக மோசமான நிர்வாகச் செயல்பாடாகும்.
சென்னையில் மொழிப்போர் ஈகியர்களான நடராசன், தாளமுத்துவுக்கு நினைவிடம் அமைக்கப்படுமென அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேசமயம், தாளமுத்து, நடராசன் ஆகிய இருவரது நினைவு நாள் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிற வேளையில், மொழிப்போர் எழுச்சியைக் கொண்டு அதிகாரத்திற்கு வந்த திமுக, இப்போதுதான் அவர்களுக்கு நினைவிடம் கட்ட முற்படுகிறதென்பது வரலாற்றுப்பேரவலமாகும்.
மாதந்தோறும் மின்கணக்கீடு செய்யப்பட்டு, மின்கட்டணம் செலுத்துவது தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் எந்தவித அறிவிப்புமில்லை. அதனைப் போல, அரசு ஊழியர்கள், ஆசிரியப் பெருமக்களுக்குப் பழைய ஓய்வூதியத்திட்டம் மீண்டும் கொண்டு வரப்படுமென தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதி குறித்தும் நிதிநிலை அறிக்கையில் எதுவும் இடம்பெறவில்லை.
ஆதித்திராவிடர், பழங்குடி, மலைவாழ் மக்கள் நலனுக்கு கடந்தாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி 5,090 கோடியாக இருந்த நிலையில், தற்போது அது 3,500 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் பல்வேறு துறைகளின் பள்ளிகள் அனைத்தும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது மாணவர்களது நலன் குறித்தும், ஆசிரியர்களது பணி குறித்தும் கல்வியாளர்கள், ஆசிரியப்பெருமக்கள் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போதைய நிதிநிலை அறிக்கையில், நிதிப்பற்றாக்குறை குறைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், மாநிலத்தின் கடன் சுமை ஒரு இலட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இத்தோடு, போக்குவரத்துக்கென்று புதிய பேருந்துகள் வாங்குவது உள்ளிட்ட கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் செயல்படுத்தப்படவில்லை.
மொத்தத்தில், கவர்ச்சிகரமான அறிவிப்புகளை மட்டுமே கொண்ட வழமையான நிதிநிலை அறிக்கையாக இருக்கிறதே ஒழிய, மக்கள் நலனையும், அவர்களது வாழ்வியல் மேம்பாட்டையும் முன்வைக்கிற திட்டங்கள் எதுவுமில்லை என 2023- 24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மதிப்பிடுகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் சொத்து முடக்கத்துக்கும் தொடர்பு இல்லை: மேலாளர்
செவ்வாய் 30, மே 2023 5:19:32 PM (IST)

பிரதமர் குறித்து தரக்குறைவாக விமர்சித்த பதிவை நீக்கினார் அமைச்சர் மனோ தங்கராஜ்
செவ்வாய் 30, மே 2023 5:04:07 PM (IST)

கஞ்சா வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக காவலர் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 30, மே 2023 4:35:20 PM (IST)

நகை வியாபாரியிடம் ரூ1.5 கோடி கொள்ளை: மிளகாய் பொடி தூவி மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 30, மே 2023 4:04:04 PM (IST)

வெற்றிக்கோப்பையுடன் சென்னை வந்த சிஎஸ்கே வீரர்கள்: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!!
செவ்வாய் 30, மே 2023 3:47:23 PM (IST)

சிஎஸ்கேவை வெற்றி பெறச் செய்தவர் பாஜக உறுப்பினர்: அண்ணாமலை சர்ச்சை கருத்து!
செவ்வாய் 30, மே 2023 3:42:42 PM (IST)
