» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
செவ்வாய் 24, ஜனவரி 2023 5:34:18 PM (IST)
தொடர் மழை காரணமாக நீரின்வரத்து அதிகரித்து உள்ளதால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பொட்டி அமைந்துள்ள மணிமுத்தாறு அணையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விடும் இந்த அருவியில் குளிக்க நெல்லை, தூத்துக்குடி,தென்காசி மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.இந்நிலையில் கடந்த இரு தினங்களாக பெய்த பருவ மழையினால் மணிமுத்தாறு அருவிக்கு வரும் நீரின்வரத்து அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டனர்.