» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோயிலில் பிரம்மாண்ட நுழைவாயில்: பக்தர்களைக் கவர்ந்த புதிய முகப்புத் தோற்றம்!
சனி 25, ஜூலை 2026 7:35:24 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பெருந்திட்ட வளாகப் பணிகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வண்ணமயமான புதிய நுழைவாயில், கோயிலுக்கு வரும் பக்தர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கடந்த 2022-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை மற்றும் ஹெச்.சி.எல் (HCL) நிறுவனம் இணைந்து ரூ. 300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகப் பணிகளைத் தொடங்கின.
இப்பணிகளை அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், தற்போது வரை சுமார் 90 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இப்பெருந்திட்ட வளாகப் பணிகளின் ஒரு பகுதியாக, கோயிலின் வடக்குப் பகுதி, சந்நிதித் தெரு வழி மற்றும் நாழிக்கிணறு செல்லும் பாதைகளில் எழில்மிகு வண்ணமயமான நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, கோயில் முகப்பிலும் புதிய நுழைவாயில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவாயிலின் புதிய முகப்புத் தோற்றம் மற்றும் கலைநயத்தை ஆன்மீக அன்பர்களும் பக்தர்களும் பெரிதும் ரசித்துப் பாராட்டி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மாயமான அண்ணன் - தங்கை: 5 மணி நேரத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் மீட்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:28:32 AM (IST)

தூத்துக்குடி பனிமய மாதாவின் 444-வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:17:35 AM (IST)

ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53-வது பெற்றோர் தினவிழா: மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா பங்கேற்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:09:42 AM (IST)

வீட்டின் கதவை உடைத்துத் திருட முயற்சி: இருவர் கைது!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:47:22 AM (IST)

அருணாச்சலம் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் - குடும்பத்தினரிடம் கனிமொழி எம்.பி., ஆறுதல்!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:26:40 AM (IST)

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டினரின் சதி: தூத்துக்குடியில் நடிகர் சரத்குமார் பேட்டி!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:22:27 AM (IST)








