» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஊடுருவ முயன்ற 12பேர் சிக்கினர் - டம்மி வெடிகுண்டுகள் பறிமுதல்!

வியாழன் 23, ஜூலை 2026 8:17:03 PM (IST)

OperationKavach.jpg

'சாகர் கவாச்' கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையின் போது, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் கடற்கரை பகுதிகளில் டம்மி வெடிகுண்டுகளுடன் ஊடுருவ முயன்ற 12 பேரை கடலோரக் காவல் படை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் 'சாகர் கவாச்' கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையின் போது, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் மற்றும் திருச்செந்தூர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் மாதிரி வெடிகுண்டுகளுடன் ஊடுருவ முயன்ற 12 பேரை கடலோரக் காவல் படை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.

கடல் வழியாகத் தீவிரவாதிகள் மற்றும் சட்டவிரோத நபர்கள் ஊடுருவுவதைத் தடுப்பதற்காகச் 'சாகர் கவாச்' எனப்படும் இரண்டு நாள் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை ஜூலை 23, 2026 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி கடலோரக் காவல் படை ஆய்வாளர் பேச்சிமுத்து தலைமையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடலிலும் கடற்கரையிலும் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் தீவிர ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

அப்போது ஒத்திகையின் எதிரணியாகச் செயல்பட்டு ஊடுருவ முயன்ற வான் தீவு தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் சந்தேகப்படும்படியாக இருந்த 4 பேர் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் பதுங்கியிருந்த 4 பேர் உட்பட மொத்தம் 12 பேரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து 4 மாதிரி வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory