» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் : மக்கள் நல கூட்டமைப்பு அறிவிப்பு!

வியாழன் 23, ஜூலை 2026 8:04:30 PM (IST)

தூத்துக்குடியில் பொதுமக்கள் போக்குவரத்தைப் பாதிக்கும் வகையில் அமைப்பட்டுள்ள ஒரே சிக்னல் முறையைக் கைவிட்டு, தனித்தனி சிக்னல் முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஜூலை 30-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனத் தூத்துக்குடி மக்கள் நல கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள 1-வது மற்றும் 2-வது ரயில்வே கேட் பகுதியில் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாக இருக்கும் வகையில் ஒரே சிக்னல் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள், மாணவ, மாணவிகள் பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, இம்முறையைக் கைவிட்டு, இரண்டு கேட்களுக்கும் தனித்தனி சிக்னல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனப் பலமுறை கோரிக்கை வைத்தும் ரயில்வே நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து, வரும் ஜூலை 30-ஆம் தேதி காலை 10:30 மணியளவில் ரயில்வே நிர்வாகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறவுள்ளதாகத் தூத்துக்குடி மக்கள் நல கூட்டமைப்பு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory