» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பக்கிள் ஓடை பணியால் குடிநீர் குழாயில் உடைப்பு: குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த மேயர் அறிவுறுத்தல்!
புதன் 22, ஜூலை 2026 12:52:05 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணியின் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டுள்ளார் .
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பக்கிள் ஓடை அகலப்படுத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இப் பணிகளின் போது, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட புதிய பேருந்து நிலையம், கலைஞர் பூங்கா, வி.எம்.எஸ். நகர், ஆர்.எஸ்.பி.ஆர். நகர், ஆதிபராசக்தி நகர், கங்கா பரமேஸ்வரி காலனி, சுப்பையா பூங்கா, லூர்தம்மாள்புரம், டி.எம்.சி. காலனி ஆகிய பகுதிகளுக்கும்; கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வி.வி.டி. பூங்கா, குருஸ்புரம் ஆகிய பகுதிகளுக்குமான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்குச் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது
இக்குடிநீர் குழாய் உடைப்பைச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இப் பணிகள் முழுமையாக முடிவடைவதற்குக் இன்னும் இரு நாட்கள் ஆகும் என்பதால் பொதுமக்கள் சிரமத்தைப் பொறுத்துக் கொண்டு, குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மாயமான அண்ணன் - தங்கை: 5 மணி நேரத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் மீட்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:28:32 AM (IST)

தூத்துக்குடி பனிமய மாதாவின் 444-வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:17:35 AM (IST)

ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53-வது பெற்றோர் தினவிழா: மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா பங்கேற்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:09:42 AM (IST)

வீட்டின் கதவை உடைத்துத் திருட முயற்சி: இருவர் கைது!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:47:22 AM (IST)

அருணாச்சலம் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் - குடும்பத்தினரிடம் கனிமொழி எம்.பி., ஆறுதல்!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:26:40 AM (IST)

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டினரின் சதி: தூத்துக்குடியில் நடிகர் சரத்குமார் பேட்டி!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:22:27 AM (IST)








