» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் நியமனம்: உள்துறைச் செயலாளர் உத்தரவு!
புதன் 22, ஜூலை 2026 12:25:08 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய எஸ்பியாக சிவபிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை டி.ஜி.பி. அலுவலகக் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக மீரா ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப் பணியிட மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ உத்தரவை உள்துறைச் செயலகம் வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பி சிவபிரசாத் கர்நாடக மாநிலம், பெங்களூரூவை சேர்ந்தவர். 2016ல் ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்று விருதுநகரில் உதவி எஸ்.பி., யாக பணியை துவக்கினார். மதுரை, சென்னை வண்ணாரப்பேட்டை, அண்ணாநகரில் துணை கமிஷனராக பணிபுரிந்தார். மதுரை, தேனி எஸ்.பி.,யாக இருந்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மாயமான அண்ணன் - தங்கை: 5 மணி நேரத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் மீட்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:28:32 AM (IST)

தூத்துக்குடி பனிமய மாதாவின் 444-வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:17:35 AM (IST)

ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53-வது பெற்றோர் தினவிழா: மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா பங்கேற்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:09:42 AM (IST)

வீட்டின் கதவை உடைத்துத் திருட முயற்சி: இருவர் கைது!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:47:22 AM (IST)

அருணாச்சலம் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் - குடும்பத்தினரிடம் கனிமொழி எம்.பி., ஆறுதல்!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:26:40 AM (IST)

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டினரின் சதி: தூத்துக்குடியில் நடிகர் சரத்குமார் பேட்டி!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:22:27 AM (IST)








