» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தேசியக் கொடி நாள் : மாணவிகள் அணிவகுப்பு!
புதன் 22, ஜூலை 2026 11:53:08 AM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தேசியக் கொடி நாளை முன்னிட்டுச் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தூத்துக்குடி தூய மரியன்னை (தன்னாட்சி) கல்லூரியின் என்.எஸ்.எஸ்., என்.சி.சி. அமைப்புகள் இணைந்து "நமது மூவர்ணக் கொடி – இந்தியாவின் பெருமை" என்ற தலைப்பில் 120 என்.சி.சி. மாணவிகள் தேசியக் கொடி வடிவில் நேர்த்தியாக நின்று மூவர்ணக் கொடியைக் காட்சிப்படுத்தினர்.
கல்லூரி முதல்வர் அருட்சகோதரி சி.ஷிபனா தலைமையில் மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னாள் முதல்வர் அருட்சகோதரி ஜெஸ்ஸி பெர்னாண்டோ சிறப்புரையாற்றினார். தொடர்ந்து தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள், தேசபக்திப் பாடல், கவிதை ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கல்லூரி நிர்வாகத்தினர், என்.சி.சி., என்.எஸ்.எஸ். அலுவலர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மாயமான அண்ணன் - தங்கை: 5 மணி நேரத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் மீட்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:28:32 AM (IST)

தூத்துக்குடி பனிமய மாதாவின் 444-வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:17:35 AM (IST)

ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53-வது பெற்றோர் தினவிழா: மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா பங்கேற்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:09:42 AM (IST)

வீட்டின் கதவை உடைத்துத் திருட முயற்சி: இருவர் கைது!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:47:22 AM (IST)

அருணாச்சலம் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் - குடும்பத்தினரிடம் கனிமொழி எம்.பி., ஆறுதல்!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:26:40 AM (IST)

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டினரின் சதி: தூத்துக்குடியில் நடிகர் சரத்குமார் பேட்டி!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:22:27 AM (IST)








