» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீடுபுகுந்து ரூ.26ஆயிரம் பணம் திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

புதன் 22, ஜூலை 2026 10:37:52 AM (IST)

செய்துங்கநல்லூரில் வீடுபுகுந்து பீரோ லாக்கரை உடைத்து ரூ.26 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சங்கரபாண்டி மனைவி சொர்ணா (80). இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். நேற்று மதியம் சொர்ணா அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வி்ட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் திரும்பி வந்தார். 

அப்போது அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கரை உடைத்து அதிலிருந்த ரூ.26ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜஸ்டஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory