» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணியிடம் 3½ பவுன் நகை பறிப்பு: இளைஞர் கைது!

புதன் 22, ஜூலை 2026 8:04:52 AM (IST)

கோவில்பட்டியில் பெண்ணியிடம் 3½ பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற வழக்கில் தொடர்புடைய இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகர் ஈபி காலனி, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சேவியர் மனைவி அனிதா (45). இவர் கடந்த 6-ஆம் தேதி ராஜீவ் நகர் அருகே நின்றுகொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இவரது கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.


இச் சம்பவம் குறித்து அனிதா அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் அடிப்படையில், இக் குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பாலாஜி நகரைச் சேர்ந்த காளிராஜ் (31) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory