» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கு சாட்சிகளுக்கு கொலை மிரட்டல் : நிபந்தனை ஜாமீனில் வந்த ரவுடி மீண்டும் கைது!

புதன் 22, ஜூலை 2026 8:01:40 AM (IST)

ஆறுமுகனேரியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி, கொலை வழக்குச் சாட்சிகளை அரிவாளைக் காட்டி மிரட்டிய ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (27) என்பவர் மீது கொலை உட்பட 12 வழக்குகள் ஆறுமுகனேரி, ஆத்தூர் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.கடந்த ஆண்டு ஆறுமுகனேரி - காயல்பட்டினம் புறவழிச்சாலையில் உள்ள சுடலைமாடசுவாமி கோவில் பூசாரி முருகேசனைக் கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், சமீபத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து திருச்செந்தூர் நீதிமன்றத்தில் கையொப்பமிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை ஆறுமுகனேரி செல்வராஜபுரம் மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் இசக்கிமுத்து அரிவாளைக் காட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். பூசாரி கொலை வழக்கில் தனக்கு எதிராகச் சாட்சி சொல்பவர்களைக் கொலை செய்து விடுவதாகவும் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த ஆறுமுகனேரி காவல் துறையினர், இசக்கிமுத்து மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory