» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் விபத்தில் காயமடைந்த வாலிபர் உயிரிழப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 11:41:31 AM (IST)
தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அண்ணா நகர் காலனியைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் கார்த்திக் ராஜா (23). இவர் கடந்த 13ஆம் தேதி குளத்தூர் கிழக்கு கடற்கரைச் சாலை விளாத்திகுளம் சாலை சந்திப்பு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியுள்ளார்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த கார்த்திக் ராஜா, உடனடியாகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுத் தீவிரச் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி கார்த்திக் ராஜா உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரோச் பார்க் பகுதியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
சனி 25, ஜூலை 2026 9:33:13 PM (IST)

தூத்துக்குடியில் 'ஓ.எல்.எஸ் எக்ஸ்போ பொருட்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 9:27:40 PM (IST)

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா கொடி பவனி கோலாகலம்!
சனி 25, ஜூலை 2026 9:19:22 PM (IST)

பருவமழைக்கு முன் பாசனக் கால்வாய்கள், குளங்களை சீரமைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் பாஜக கோரிக்கை!
சனி 25, ஜூலை 2026 8:18:31 PM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!
சனி 25, ஜூலை 2026 5:26:23 PM (IST)

தூத்துக்குடி வாலிபர் அருணாச்சலம் குடும்பத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் தொலைபேசியில் ஆறுதல்!
சனி 25, ஜூலை 2026 4:40:37 PM (IST)








