» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 10:20:41 AM (IST)
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்குத் தேவையான பாதுகாப்புச் செயல்திட்டங்களை மாநில அரசு வகுக்க வேண்டும் கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரால் 4 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மாநில அரசு போதிய செயல்திட்டங்களை வகுக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்குத் தேவையான பாதுகாப்புச் செயல்திட்டங்களை மாநில அரசு வகுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் தொடர்கதையாக உள்ள சூழலில், குழந்தைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரோச் பார்க் பகுதியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
சனி 25, ஜூலை 2026 9:33:13 PM (IST)

தூத்துக்குடியில் 'ஓ.எல்.எஸ் எக்ஸ்போ பொருட்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 9:27:40 PM (IST)

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா கொடி பவனி கோலாகலம்!
சனி 25, ஜூலை 2026 9:19:22 PM (IST)

பருவமழைக்கு முன் பாசனக் கால்வாய்கள், குளங்களை சீரமைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் பாஜக கோரிக்கை!
சனி 25, ஜூலை 2026 8:18:31 PM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!
சனி 25, ஜூலை 2026 5:26:23 PM (IST)

தூத்துக்குடி வாலிபர் அருணாச்சலம் குடும்பத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் தொலைபேசியில் ஆறுதல்!
சனி 25, ஜூலை 2026 4:40:37 PM (IST)








