» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்: ஜூலை 25-ல் சப்பர பவனி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:35:25 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர் ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று (ஜூலை 16) அதிகாலை 5.15 மணிக்குத் திருப்பலியும், காலை 6.30 மணிக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் மீனவ மக்களுக்காகப் பங்குத்தந்தை தலைமையில் சிறப்புத் திருப்பலியும் நடைபெற்றன. மதியம் 12 மணிக்கும் சிறப்புத் திருப்பலி நடத்தப்பட்டது.
மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித சந்தியாகப்பரின் சொரூபம் குருசு ஆலயத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மாலை 6 மணிக்குக் கோவிலை வந்தடைந்தது. இரவு 7.15 மணிக்குக் கொடிகள் மந்திரிக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து மறையுரையும், நற்கருணை ஆராதனையும் நடைபெற்றன. இக்கொடியேற்ற நிகழ்வில் பெரியதாழை, உவரி, மணப்பாடு, ஆலந்தலை, படுக்கப்பத்து, இடிந்தகரை, கூடுதாலை, தூத்துக்குடி மற்றும் அமலிபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கடலோர மீனவ மக்கள் பங்கேற்றனர்.
விழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்குத் திருப்பலியும், மாலை 6.30 மணிக்குத் திருயாத்திரை திருப்பலியும் நற்கருணை ஆராதனையும் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வான சப்பர பவனி ஜூலை 25, 2026 அன்று நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4.30 மணி, காலை 5.10 மணி, காலை 5.50 மணி, காலை 7 மணிக்குச் சிறப்புத் திருப்பலிகள் நடைபெறும்.
தொடர்ந்து காலை 10 மணிக்கு ஆலயத் திருத்தேரில் மாதாவும், சப்பரத்தில் புனித சந்தியாகப்பரும் வீதிஉலா புறப்பாடு நடைபெற்று முக்கிய வீதிகள் வழியாகப் பவனியாகச் செல்ல உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளைக் குருசு ஆலய பங்குத்தந்தை, அருட் சகோதரிகள், பங்குபேரவையினர் மற்றும் ஊர்நலக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுதா கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: ஆக.13, 14ல் நடைபெறுகிறது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:35:31 PM (IST)

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:06:03 PM (IST)

மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2பேர் பரிதாப சாவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:30:22 AM (IST)

தூத்துக்குடி குடிநீர் பிரச்னையில் அமைச்சர் மவுனம் ஏன்? — பாஜக சராமாரி கேள்வி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:11:16 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:02:45 AM (IST)

டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் 30 பேருக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 சிறப்புப் பயிற்சி!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:08:10 AM (IST)








