» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஜவுளிக் கடையில் ரூ.2 லட்சம் திருட்டு: பெண் உள்பட 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 17, ஜூலை 2026 7:37:15 AM (IST)
கயத்தாறில் உள்ள ஜவுளிக் கடையில் திருமணத்திற்குத் துணி எடுப்பது போல நடித்து, பணப்பெட்டியிலிருந்த ரூ.2 லட்சம் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்ற பெண் உள்பட 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அகிலாண்டபுரம் இந்திரா காலனியைச் சேர்ந்த மகாராஜன் (32), கயத்தாறு பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு வந்த அடையாளம் தெரியாத ஒரு ஆணும் பெண்ணும், தங்களது வீட்டுத் திருமணத்திற்காகத் துணி எடுப்பதாகக் கூறி ரூ.27 ஆயிரத்திற்கு ஜவுளி ரகங்களைத் தேர்வு செய்துள்ளனர். பின்னர், பணத்தைக் கொடுத்துவிட்டுத் துணிகளை எடுத்துக்கொள்வதாகக் கூறிவிட்டு அவர்கள் கடையை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கடையில் இருந்த பணப்பெட்டியை உரிமையாளர் மகாராஜன் சரிபார்த்தபோது, அதிலிருந்த ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து மகாராஜன் அளித்த புகாரின் அடிப்படையில், கயத்தாறு காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஜவுளிக்கடையில் வாடிக்கையாளர்கள் போல நடித்துப் பணத்தைத் திருடிச் சென்ற இருவரையும் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மாயமான அண்ணன் - தங்கை: 5 மணி நேரத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் மீட்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:28:32 AM (IST)

தூத்துக்குடி பனிமய மாதாவின் 444-வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:17:35 AM (IST)

ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53-வது பெற்றோர் தினவிழா: மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா பங்கேற்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:09:42 AM (IST)

வீட்டின் கதவை உடைத்துத் திருட முயற்சி: இருவர் கைது!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:47:22 AM (IST)

அருணாச்சலம் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் - குடும்பத்தினரிடம் கனிமொழி எம்.பி., ஆறுதல்!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:26:40 AM (IST)

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டினரின் சதி: தூத்துக்குடியில் நடிகர் சரத்குமார் பேட்டி!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:22:27 AM (IST)








