» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரயில் முன் பாய்ந்து கடலை மிட்டாய் வியாபாரி தற்கொலை: குடும்பத் தகராறில் பரிதாபம்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 11:40:03 AM (IST)
மணியாச்சி அருகே குடும்பத் தகராறு காரணமாக, கடலை மிட்டாய் வியாபாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் திருமலை. இவரது மகன் சின்னதுரை (57). இவர் மணியாச்சி ரயில் நிலையத்தில் கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார். சின்னதுரை கடந்த சில நாட்களாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்கும், அவரது மனைவி சிவகாமிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த சின்னதுரை "தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்" எனக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். வெளியே சென்ற சின்னதுரை, மணியாச்சி ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி செல்லும் இருப்புப் பாதையில் வந்து கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து உயிரிழந்தார். இது குறித்து திருநெல்வேலி ரயில்வே காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







