» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எரிவாயு தட்டுப்பாடு குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: மு. வீரபாண்டியன் கோரிக்கை!

வெள்ளி 3, ஏப்ரல் 2026 8:21:21 AM (IST)

எரிவாயு தட்டுப்பாடு குறித்து மத்திய அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தினார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் சாதி, மத மற்றும் பதற்ற அரசியலை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பதற்குத் திருப்பரங்குன்றம் ஒரு சாட்சியாகும். பாஜகவின் மக்கள் விரோத அரசியலுக்கு அதிமுகவும் துணையாகச் செயல்பட்டு வருகிறது.

எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்க இப்போதுதான் டெல்லியில் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். போதிய கையிருப்பு இருந்தால் அதனை ஏன் மக்களுக்கு விநியோகிக்கவில்லை? இது குறித்து மத்திய அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

அரசியலில் களம் கண்டுள்ள நடிகர் விஜய் குறித்துப் பேசுகையில், "அரசியல் கட்சித் தலைவராக அவரை மதிக்கிறோம். ஆனால், ஒரு கட்சிக்குத் தெளிவான லட்சியமும், கொள்கையும் அவசியம். இந்தியாவின் அடிப்படை கூறான மதச்சார்பின்மையைச் சிதைக்கும் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை" என்று குறிப்பிட்டார்.

எங்கள் கூட்டணியில் கருத்துச் சொல்லும் ஜனநாயகம் உள்ளது. பாஜகவை வீழ்த்துவதில் திமுக மற்றும் இடதுசாரிகளைப் போலவே திருமாவளவனும் உறுதியாக உள்ளார். கம்யூனிஸ்ட் அரசியலை மக்கள் மதிக்கத் தொடங்கியுள்ளனர், எனவே எங்கள் வெற்றி உறுதி என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

மேலும், நாடாளுமன்றத்தில் விவாதங்கள் இன்றி சட்டங்கள் நிறைவேற்றப்படுவதையும், சிறுபான்மையினரைக் குறிவைத்துச் சட்டங்கள் உருவாக்கப்படுவதையும் அவர் கடுமையாகக் கண்டித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory