» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாற்றுத்திறனாளிப் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை!
புதன் 1, ஏப்ரல் 2026 8:39:16 PM (IST)
கடம்பூர் அருகே மாற்றுத்திறனாளிப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 62 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கடம்பூரைச் சேர்ந்த சேர்மராஜ் (62) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது குறித்துத் தீவிர விசாரணை நடத்திய கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சேர்மராஜைக் கைது செய்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில்நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வசீத்குமார் இன்று (01.04.2026), சேர்மராஜ் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் அவரை குற்றவாளி என உறுதி செய்தார். அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூபாய் 6,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் சாட்சிகளைச் சரியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தித் தண்டனை பெற்றுத் தந்த மணியாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அஜுகுமார், வழக்கைத் திறம்படப் புலனாய்வு செய்த அப்போதைய காவல் உதவி ஆய்வாளர் (தற்போது ஆய்வாளர்) அன்னலட்சுமி, அரசுத் தரப்பில் சிறப்பாக வாதிட்ட வழக்கறிஞர் பூங்குமார் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் ராதிகா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பாராட்டியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







