» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தம்பியைக் கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

செவ்வாய் 31, மார்ச் 2026 7:57:31 AM (IST)

சொத்துப் பிரச்சினை தகராறில் தம்பியைக்கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 2021-ஆம் ஆண்டு, பசுவந்தனை அருகே உள்ள தெற்கு பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி (56) என்பவருக்கும், அவரது தம்பி முருகன் (44) என்பவருக்கும் இடையே சொத்துப் பிரச்சினை காரணமாகத் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முனியசாமி, தனது தம்பி முருகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இது குறித்துப் பசுவந்தனை போலீசார் வழக்குப் பதிவு செய்து முனியசாமியைக் கைது செய்தனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்றம் - 2-இல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய நீதிபதி பிரீத்தா, முனியசாமி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் துரிதமாகப் புலனாய்வு செய்து, உரியச் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தித் தண்டனை பெற்றுத் தந்த மணியாச்சி டிஎஸ்பி அஜுகுமார், அப்போதைய பசுவந்தனை ஆய்வாளர் சித்திரகலா, அரசுத் தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம், நீதிமன்றக் காவலர் கவிதா ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory