» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் சமத்துவ மக்கள் கழகம் தனித்துப் போட்டி: 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!
செவ்வாய் 31, மார்ச் 2026 7:50:23 AM (IST)

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் சமத்துவ மக்கள் கழகம் தனித்துப் போட்டியிடுவதாக அந்தப் கட்சியின் மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் சமக வேட்பாளர்களின் விபரம் வருமாறு:
தூத்துக்குடி: ஏ. அந்தோணி பிச்சை
ஸ்ரீவைகுண்டம்: எஸ். ஜெபராஜ் டேவிட்
திருச்செந்தூர்: பி. அருண் சுரேஷ்குமார்
ஓட்டப்பிடாரம் (தனி): எஸ். ராஜாத்தி
கோவில்பட்டி: எம். சகாயராஜ்
விளாத்திகுளம்: பி. கண்டிவேல்
இது குறித்து மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் சமத்துவ மக்கள் கழகம் தனித்துக் களம் காண்கிறது. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் வருகிற சனிக்கிழமை காலை 10 மணிக்கு அந்தந்தத் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய உள்ளனர்" எனத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







