» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்
திங்கள் 30, மார்ச் 2026 8:11:32 PM (IST)

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 99 ஆயிரத்து 400 ரூபாயை பறக்கும் படையினர் கைப்பற்றினர். மாவட்ட முழுவதும் சுமார் 57 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி கருப்பட்டி சொசைட்டி பகுதியில் பறக்கும் படை அதிகாரி பொன்மாரி தலைமையில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கே வந்த ஒரு காரை சோதனை செய்தனர் அப்போது அந்த காரில் இருந்த கணக்கில் வராத ரூபாய் 99 ஆயிரத்து 400 இருப்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அந்தப் பணத்தை கைப்பற்றிய பறக்கும் படை அதிகாரிகள் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் உள்ள தலைமை இடத்து துணை வட்டாட்சியர் பாலமுருகனிடம் பணத்தை ஒப்படைத்தனர். மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் இதுவரை சுமார் 57 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







