» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது!

திங்கள் 30, மார்ச் 2026 9:22:07 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மாவட்ட எஸ்பி மதன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறப்பு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார், எப்போதும்வென்றான் பகுதியில் நேற்று தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் குளத்தூர் ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் நம்பிராஜ் (28) மற்றும் அழகுராஜ் மகன் ஜெகதீஷ் (34) என்பது தெரியவந்தது. இவர்கள் சட்டவிரோத விற்பனைக்காக ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த ஒரு கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, இவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory