» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது!
திங்கள் 30, மார்ச் 2026 9:22:07 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மாவட்ட எஸ்பி மதன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறப்பு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார், எப்போதும்வென்றான் பகுதியில் நேற்று தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் குளத்தூர் ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் நம்பிராஜ் (28) மற்றும் அழகுராஜ் மகன் ஜெகதீஷ் (34) என்பது தெரியவந்தது. இவர்கள் சட்டவிரோத விற்பனைக்காக ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த ஒரு கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, இவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







