» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பைக்கை சேதப்படுத்தியவர் கைது!
திங்கள் 30, மார்ச் 2026 9:10:19 AM (IST)
தூத்துக்குடியில் தகராறில், தனியார் நிறுவன ஊழியரின் பைக்கை சேதப்படுத்திய நபரைத் தென்பாகம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்தவர் ராஜூ (30). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று தனது மோட்டார் சைக்கிளில் அண்ணா நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கண்ணபிரான் என்பவருக்கும், ராஜூவிற்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுத் தகராறாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த கண்ணபிரான், சாலையோரம் கிடந்த பெரிய கல்லை எடுத்து ராஜூவின் மோட்டார் சைக்கிள் மீது வீசினார். இதில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்தது. இந்தச் சம்பவம் குறித்து ராஜூ அளித்த புகாரின் பேரில், தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டு வாகனத்தைச் சேதப்படுத்திய குற்றத்திற்காகக் கண்ணபிரானைப் போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







