» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சத்துணவு பெண் ஊழியரிடம் அத்துமீறல்: வாலிபர் கைது!

சனி 28, மார்ச் 2026 8:40:48 AM (IST)

குலசேகரன்பட்டினம் அருகே விறகு பொறுக்கச் சென்ற சத்துணவு மையப் பெண் ஊழியரிடம் அத்துமீறி நடந்து, நகை பறிக்க முயன்ற வாலிபரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சிறுநாடார்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர், மாதவன்குறிச்சி சத்துணவு மையத்தில் சமையலராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 25-ம் தேதி மாலை, அவர் விறகு சேகரிப்பதற்காகச் சிறுநாடார்குடியிருப்பு - பெரியபுரம் பிரிவு சாலையில் உள்ள ஒரு கோயில் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர், வழி கேட்பது போலப் பேச்சு கொடுத்து அந்தப் பெண்ணிடம் அத்துமீறி நடந்துள்ளார். அவரிடமிருந்து தப்பிக்க அந்தப் பெண்மணி மல்லுக்கட்டிப் போராடி, அங்கிருந்து ஊருக்குள் ஓடி வந்துள்ளார். அப்போது அந்த வாலிபர், அந்தப் பெண் அணிந்திருந்த நகையைத் தங்கச் செயின் எனத் தவறாக எண்ணிப் பறித்துச் சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். விசாரணையில், இப்பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டவர் பள்ளிபத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் (28) என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, யோகேஸ்வரனைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திப் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory