» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்களை அவதூறாகப் பேசிய பொன்ராஜ் மீது நடவடிக்கை : தூத்துக்குடி எஸ்பியிடம் புகார்!
வெள்ளி 27, மார்ச் 2026 4:21:08 PM (IST)

பெண்களை அவதூறாகப் பேசிய பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு அளித்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் டி.வி.ஏ. பிரைட்டர் தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் இன்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்து புகார் மனு அளித்தனர்.
அதில், பெண்களைப் பற்றி இணையதளத்தில் தரக்குறைவாகவும், அவதூறாகவும் விமர்சனம் செய்த பொன்ராஜ் வெள்ளைச்சாமி என்பவர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இந்தநிகழ்வின் போது தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், மகளிர் அணி இணை அமைப்பாளர்கள், மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







