» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் - லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வியாழன் 26, மார்ச் 2026 11:36:47 AM (IST)

கழுகுமலையில் பைக் மீது சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் மதுரையைச் சேர்ந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள எஸ். பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் பெருமாள் (52), இவர் நேற்று இரவு தனது ராயல் என்பீல்டு பைக்கில் கோவில்பட்டி - கழுகுமலை சாலையில் சென்று கொண்டிருந்தார். கெச்சிலாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, கழுகுமலை சாலையில் சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாகப் பெருமாள் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. 

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பெருமாள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த பெருமாளின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் தென்காசி மாவட்டம், கீழ நவிதா நல்லூர் பகுதியைச் சேர்ந்த சண்முகையா மகன் ராசு (46), என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory