» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாற்று வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க வேண்டும் : மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு

புதன் 25, மார்ச் 2026 4:04:21 PM (IST)

மாற்று வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க வேண்டும் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார். 

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அண்ணாநகரில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், "தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் பாரபட்சமின்றிப் புதிய சாலைகள், குடிநீர் போன்ற உள்கட்டமைப்புப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 6 நாட்களுக்கு ஒருமுறை வந்த குடிநீர், தற்போது தினமும் 24 மணி நேரமும் கிடைக்கும்படி மாற்றப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் அறிவிப்போடு நின்ற விவிடி மேம்பாலத் திட்டத்திற்கு மாற்றாக, முட்டுச்சந்தாக இருந்த பல பகுதிகளை விரிவாக்கம் செய்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்த்து நின்றவர்கள் டெபாசிட் இழந்தது போல், இந்தத் தேர்தலிலும் நடக்க வேண்டும். மக்கள் நலன் காக்கும் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் எப்போதும் கதாநாயகன். எனவே, சாதனைகளுக்காகப் பதிவாகும் அனைத்து வாக்குகளும் உதயசூரியன் சின்னத்திற்கே வர வேண்டும்.என்று பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory