» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீ விபத்து: நோயாளிகள் பாதுகாப்பாக இடமாற்றம்
செவ்வாய் 24, மார்ச் 2026 11:04:12 AM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள சுவிட்ச் போர்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து, மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் 5-வது தளத்தில் அமைந்துள்ள அறுவை சிகிச்சை அரங்கத்தின் மின் சுவிட்ச் போர்டில் இன்று திடீரெனத் தீப்பிடித்தது. சுவிட்ச் போர்டு எரிந்து கரும்புகை வெளியேறியதைக் கண்ட அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர்.
தீப்பிடித்ததைக் கண்டவுடன் மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாகத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீ மேலும் பரவாமல் தடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அந்தத் தளத்திற்கான மின் இணைப்பு உடனடியாகத் துண்டிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 5-வது தளத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக 4-வது தளத்திற்கு மாற்றப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மின் கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)

அதிமுக வேட்பாளர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பு: அயன்கரிசல்குளம் விநாயகர் கோயிலில் தரிசனம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 11:58:50 AM (IST)

நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)

திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு: போட்டி போட்டு வாங்கிய பொதுமக்கள்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:48:37 AM (IST)







