» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டாஸ்மாக் அருகே தகராறு: ஒருவருக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது!

செவ்வாய் 24, மார்ச் 2026 8:34:53 AM (IST)

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடை அருகே ஏற்பட்ட மோதலில், ஒருவரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரைத் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி ஊரணி ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி என்ற ராகவன் (35). இவரது தம்பி ஆதிகேசவன் (27). இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தெர்மல் நகர் கேம்ப்-1 பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ராகவன், ஆதிகேசவன் மற்றும் காதர் மீரான் நகரைச் சேர்ந்த முத்துராமன் (42) ஆகியோர் நாணயத்தைச் சுண்டிவிடும் விளையாட்டில் (சூதாட்டம்) ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

விளையாட்டின் போது இவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சகோதரர்களான ராகவனும், ஆதிகேசவனும் சேர்ந்து முத்துராமனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த முத்துராமன், சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து முத்துராமன் அளித்த புகாரின் பேரில், தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆதிகேசவனைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராகவனைப் போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory