» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் போலீசாருக்கு கொலை மிரட்டல்: இருவர் கைது!

செவ்வாய் 24, மார்ச் 2026 8:32:05 AM (IST)

தூத்துக்குடியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரைப் பணி செய்யவிடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்த இருவரைப் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் இரவு காதர் மீரான் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பகுதியில் இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர் கும்பலாக நின்று பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

இதனைப் பார்த்த போலீசார் அந்த இடத்திற்குச் சென்று அவர்களைக் கலைந்து செல்லுமாறு கூறி விசாரணை நடத்தினர். அப்போது ஆத்திரமடைந்த அந்த கும்பல், போலீசாரைப் பணி செய்யவிடாமல் தடுத்து அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்துத் தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கோவில்பிள்ளை விளையைச் சேர்ந்த ரீத்தன் (22) உள்ளிட்ட இருவரைக் கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவத்தின் போது அங்கிருந்து தப்பியோடிய மற்ற இருவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory