» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சமூக வலைதளங்களில் சிறுமியின் புகைப்படம் வெளியீடு - 22 வழக்குகள் பதிவு!
செவ்வாய் 24, மார்ச் 2026 7:53:06 AM (IST)
வேடநத்தம் படுகொலை சம்பவத்தில் சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாக சிறுமியின் விவரங்களை வெளியிட்ட நபர்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு எதிராக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட சிறுமிகளின் புகைப்படம், பெயர் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட அடையாளங்களைச் சமூக ஊடகங்கள் அல்லது இணையதளங்களில் வெளியிடுவது இந்தியச் சட்டப்படி (POCSO மற்றும் பிற பிரிவுகள்) கடும் குற்றமாகும். இது பாதிக்கப்பட்ட சிறுமியின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கும், கண்ணியத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகும்.
குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடநத்தம் மாணவி கொலை வழக்கில், சிறுமியின் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் பதிவிட்டவர்கள் மீது இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாவட்டக் காவல்துறை இது தொடர்பாக விடுத்துள்ள எச்சரிக்கையில்: "பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் மற்றும் அத்தகைய பதிவுகளை அனுமதிக்கும் சமூக ஊடக நிறுவனங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்." எனத் தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)

அதிமுக வேட்பாளர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பு: அயன்கரிசல்குளம் விநாயகர் கோயிலில் தரிசனம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 11:58:50 AM (IST)

நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)

திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு: போட்டி போட்டு வாங்கிய பொதுமக்கள்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:48:37 AM (IST)







