» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தெப்பகுளம் அருகே திடீர் பள்ளம் : கான்கிரீட் தளம் சேதம் - அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

வியாழன் 11, டிசம்பர் 2025 11:17:45 AM (IST)



தூத்துக்குடி சிவன் கோவில் தெப்பகுளம் அருகே திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் சேதம் அடைந்த பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார். 

தூத்துக்குடியில் சுமார் 130 ஆண்டுகள்  பழமையான சிவன் கோவிலுக்கு சொந்தமான தெப்பகுளத்தில் ஆண்டுதோறும் தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தெப்பக்குளத்தை சுற்றி ரூ.75 லட்சம் செலவில் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், முதற்கட்டமாக தெப்பக்குளத்தைசுற்றி கான்கிரீட் கல் பதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தெப்பக்குளம் சுவர் அருகே திடீரென 6 அடிஅளவிற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் புதிதாக போடப்பட்ட கான்கிரீட் தளங்கள சேதமானது. மேலும் அருகில் இருந்த மின்மாற்றிகள் சரியும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து மின்வாரிய அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்து சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், அமைச்சர் கீதா ஜீவன் தெப்பக்குளத்தைஆய்வு செய்து உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின் போது, மாநகராட்சி பொறியாளர் தமிழ்ச்செல்வன், திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், அறங்காவலர்கள் கந்தசாமி, மகாராஜன், திமுக நிர்வாகி மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory