» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தந்தை கைது!

புதன் 10, டிசம்பர் 2025 8:06:05 AM (IST)

கோவில்பட்டி அருகே 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கயத்தாறில் மதுக்கூடத்தில் வேலை செய்து வரும் 36 வயது நபர், சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியதுடன், மாவட்ட குழந்தைகள் உதவி மையத்துக்கு மறுநாள் தகவல் தெரிவித்தார். 

இதுதொடர்பாக குழந்தைகள் உதவி மையத்தின் உறுப்பினர்கள் சிறுமி, தாயை மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, சிறுமிக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுத்ததும், யாரிடமாவது தெரிவித்தால் கொன்று விடுவதாக மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து, மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory