» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தந்தை கைது!
புதன் 10, டிசம்பர் 2025 8:06:05 AM (IST)
கோவில்பட்டி அருகே 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கயத்தாறில் மதுக்கூடத்தில் வேலை செய்து வரும் 36 வயது நபர், சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியதுடன், மாவட்ட குழந்தைகள் உதவி மையத்துக்கு மறுநாள் தகவல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக குழந்தைகள் உதவி மையத்தின் உறுப்பினர்கள் சிறுமி, தாயை மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, சிறுமிக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுத்ததும், யாரிடமாவது தெரிவித்தால் கொன்று விடுவதாக மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து, மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம்: தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:54:04 PM (IST)

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு : தாயிடம் போலீசார் விசாரணை
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:11:52 PM (IST)

வனங்களை உருவாக்க கல்லூரி மாணவர்கள் உறுதியேற்பு
செவ்வாய் 20, ஜனவரி 2026 5:12:35 PM (IST)

தூத்துக்குடியில் ஜன.21ல் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:56:45 PM (IST)

சகிப்பின்மைக்கு இடமில்லை: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி எம்.பி. ஆதரவு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:11:07 PM (IST)

ஷஃபான் பிறை: பிப்.3ல் பராஅத் இரவு அனுசரிப்பு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:13:07 PM (IST)








