» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் உத்தரவு: அரசுக்கு நன்றி தெரிவிக்க வந்தவர் கைது!

திங்கள் 8, டிசம்பர் 2025 12:30:14 PM (IST)



காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்திற்கு நன்றி தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சமூக ஆர்வலரை போலீசார் கைது செய்தனர். 

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தற்போது அமலில் உள்ளது, இதில் பாட்டிலுக்கு ரூ.10 வழங்கப்படும். இந்த நிலையில், தூத்துக்குடி அண்ணா நகர் 11வது தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (50), சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்.  இவர் அரசு அறிவித்துள்ள காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் உத்தரவு தனக்கு கிடைத்த வெற்றி என்று கூறி, அரசுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கழுத்தில் ரோஜாப்பூ மாலை அணிந்து கொண்டு, ரதம் போன்ற வாகனத்துடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். 

அவரை ஆட்சியர் அலுவலக வாசலில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory