» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தென் மாவட்ட அளவிலான அழகு கலை போட்டி!

திங்கள் 8, டிசம்பர் 2025 11:53:13 AM (IST)



கோவில்பட்டியில் தென் மாவட்ட அளவிலான அழகு கலை, ஆரிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பரிசு வழங்கினார். 

தமிழ்நாடு ஆரி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோவில்பட்டி ராஜ் மஹாலில் அழகு கலை, தையல், ஆரி, மெஹந்தி உள்ளிட்ட போட்டிகளும் பள்ளி மாணவர் மாணவிகளுக்கான யோகா, பரதம், ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சார்ந்த சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். 

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ. ராஜு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். இதில், இந்திய ஆரி தொழிலாளர்கள் கூட்டமைப்பு தேசிய தலைவர் அரவிந்த் லட்சுமி நாராயணன்,தமிழ்நாடு ஆரி தொழிலாளர்கள் சங்க தலைவர் ராஜ ராஜேஸ்வரி, பொதுச்செயலர் பரமேஸ்வரி, பொருளாளர் ராஜலட்சுமி, தென்காசி மாவட்ட செயலர் பத்மாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory