» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பைக் விபத்தில் லாரி டிரைவர் உயிரிழப்பு!
திங்கள் 8, டிசம்பர் 2025 11:19:03 AM (IST)
தூத்துக்குடியில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி, திருச்செந்தூர் ரோடு பெரியசாமி நகரைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் மாரி செல்வம் (24), லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 6ம் தேதி தனது பைக்கில் முத்தையாபுரம் சென்றுவிட்டு தூத்துக்குடிக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். உப்பாத்து ஓடை பாலத்தில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரது பைக் மீது மோதியது.
இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முக குமாரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










