» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் லாரி டிரைவர் உயிரிழப்பு!

திங்கள் 8, டிசம்பர் 2025 11:19:03 AM (IST)

தூத்துக்குடியில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில்  லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி, திருச்செந்தூர் ரோடு பெரியசாமி நகரைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் மாரி செல்வம் (24), லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 6ம் தேதி தனது பைக்கில் முத்தையாபுரம் சென்றுவிட்டு தூத்துக்குடிக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். உப்பாத்து ஓடை பாலத்தில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரது பைக் மீது மோதியது.

இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முக குமாரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory