» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மண் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது: ஜேசிபி, 2 டிராக்டர் பறிமுதல்!

திங்கள் 8, டிசம்பர் 2025 8:23:06 AM (IST)

ஆறுமுகநேரியில் மண் திருட்டில் ஈடுபட்டதாக 3 பேரை போலீசார் கைது செய்து, ஜேசிபி, 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தாமஸ், காவலர் கார்த்திக்ராஜ் ஆகியோர் காயல்பட்டினம் புறவழிச் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, சாலையோரமுள்ள தனியார் இடத்தில் சிலர் ஜேசிபி இயந்திரம் மூலம் மண் திருடினராம்.

அவர்கள் டிராக்டர்கள் ஓட்டுநர்களான அடைக்கலாபுரம் சுனாமி நகர் இன்னாசிராஜ் மகன் முத்துகிருஷ்ணன் (19), ஆறுமுகனேரி காமராஜபுரம் எப்ரான் லூர்துமணி மகன் முத்துராஜ் (21), ஜேசிபி டிரைவரான ஆறுமுகனேரி பாரதிநகர் ஜேம்ஸ் மகன் ஆகாஷ் (20) என விசாரணையில் தெரியவந்தது.

உதவி ஆய்வாளர் வாசுதேவன் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்து, ஜேசிபி இயந்திரம், 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தார். அவர்களை ஆய்வாளர் திலீபன் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory