» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மது போதையில் தகராறு: 2 பேர் கைது
திங்கள் 8, டிசம்பர் 2025 8:14:40 AM (IST)
கோவில்பட்டி அருகே தகராறில் ஈடுபட்டதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே விஜயாபுரி கீழத் தெருவைச் சேர்ந்தவர் ரா. வைரமுத்து (44). இவரது மகன் அய்யனார் (19). இருவரும் கட்டடத் தொழிலாளிகள். அய்யனாரின் நண்பர்களான முத்துமாலை மகன் கார்த்திக் (26), முருகன் மகன் செல்வம் (38)ஆகியோர் அங்குள்ள கோயில் அருகே நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டனர். இதையறிந்த வைரமுத்து தகராறை விலக்கச் சென்றார்.
அப்போது, செல்வம் அவதூறாகப் பேசி கத்தியை வீசியதில் வைரமுத்துவின் வயிற்றில் காயமேற்பட்டது. அப்பகுதியினர் கண்டித்ததால் செல்வம் மிரட்டல் விடுத்துச் சென்றாராம். காயமடைந்த வைரமுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னர், நேற்று அளித்த புகாரின்பேரில், நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிந்து செல்வத்தைக் கைது செய்தனர்.
இதனிடையே, அய்யனார் கார்த்திக் வீட்டுக்குச் சென்று அவதூறாகப் பேசி அரிவாளைக் காட்டி மிரட்டியதுடன் கதவை சேதப்படுத்தினாராம். இதுகுறித்து கார்த்திக் நேற்று அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து அய்யனாரைக் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










