» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் தெப்பக்குளம் மண்டபத்தில் தீ விபத்து!

திங்கள் 8, டிசம்பர் 2025 8:08:31 AM (IST)

திருச்செந்தூர் தெப்பக்குளம் மண்டபத்தில் மின் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் மின் இணைப்புப் பெட்டி, வயர்கள் எரிந்து சேதமாகின.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம், நாகர்கோவில் சாலையில் ஆவுடையார்குளம் அருகில் உள்ளது. தற்போது, தொடர் மழை மற்றும் நீர் வரத்தால் தெப்பக்குளம் நிரம்பியுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் மண்டபத்தில் மின்கசிவு ஏற்பட்டு நுழைவுப் பகுதியில் இருந்த மின் இணைப்புப் பெட்டி, வயர்கள் எரிந்து சேதமாகின.

அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில், திருச்செந்தூர் தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர். சம்பவம் அறிந்து, கோயில் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, பணியாளர் ஜெகன், உதவி பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள், போலீசார் வந்தனர். உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory