» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு பள்ளியில் கழிவறையின்றி மாணவர்கள் அவதி : நடவடிக்கை எடுக்க எஸ்.எஃப்.ஐ கோரிக்கை!

சனி 6, டிசம்பர் 2025 10:33:58 AM (IST)



கோவில்பட்டி வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மூடிக்கிடக்கும் கழிவறையை சரி செய்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை  வசதி இல்லாமல் மாணவர்கள் பொதுவெளியில் சிறுநீர் கழிக்கும் நிலையால் மாணவர்களுக்கு நோய் தொற்றும் அபாயம் உள்ளது. மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருவதற்கு சிறிது காலமே இருப்பதால் இது மாணவர்களின் உடல் நலத்தையும், கல்வியையும் பாதிக்கும். பள்ளியில் இரண்டே கழிப்பறை இருந்தும் அதையும் பள்ளி மூடி கிடப்பில் போட்டுடிருக்கிறது. 

இதனால் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதற்காக மூடிக்கிடப்பில் இருக்கும் கழிவறையை சரி செய்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்  என்றும் கூடுதலாக சிறுநீர் கழிப்பதற்கு கழிப்பறை அமைத்துதர வேண்டும் என்றும்  கோவில்பட்டியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலருக்கு மாவட்டச் செயலாளர் ராம்குமார் தலைமையில் மாவட்ட குழு சார்பாக மனு அளிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory