» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.69 லட்சம் பீடி இலை மூட்டைகள் தூத்துக்குடியில் பறிமுதல்!

வியாழன் 20, நவம்பர் 2025 3:43:23 PM (IST)



தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.69 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடியில், கியூ பிரிவு குற்ற புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  உதவி ஆய்வாளர் ராமசந்திரன் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் தலைமை காவலர் இருதயராஜ் குமார் இசக்கிமுத்து காவலர் பேச்சி ராஜா ஆகியோர் இன்று அதிகாலை 04.30 மணியளவில் ஸ்டெர்லைட் அருகே, பைபாஸ் ஜோதி நகர் விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, இலங்கைக்கு கடத்துவதற்காக லோடு வேனில் பீடி இலைகள் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதில், சுமார் 35 கிலோ வீதம் 59 மூட்டைகளில் இருந்த சுமார் 2000 கிலோ பீடி இலைகள் கைப்பற்றபட்டது. இதன் மதிப்பு 69 இலட்சம் ஆகும். மேலும் இதில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கைப்பற்றபட்ட பீடி இலைகள் மேல் நடவடிக்கைக்காக சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. 


மக்கள் கருத்து

எல்லாம்Nov 23, 2025 - 08:54:44 AM | Posted IP 162.1*****

மீனவர்களே என்னது இதெல்லாம்? இலங்கைக்காரன் பீடி எல்லாம் குடிப்பாரோ? இலங்கை இன்னும் ஏழ்மையில் இருக்கா ? எல்லாம் சில பண பேய் ஆசை பிடித்த கடல் வளங்களை சுரண்டும் சில மீனவர்கள் தான் காரணம் .

naan thaanNov 21, 2025 - 05:56:46 PM | Posted IP 172.7*****

அதெப்படி திமிங்கலம் எப்பவும் வண்டியும் பொருளும் மட்டும் மாட்டுது ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory